அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே தடுப்புக்காவலில் இருந்த போது கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் என அவரது மனைவி மனோரி சலே தெரிவித்தார்.
தாங்கள் விசாரணைக்கு தயார் என தெரிவிக்கும் அவரது மனைவி மறுபுறம் சுரேஷ் சலேவின் மடிக்கணனி மற்றும் தொலைபேசி கடவுச் சொற்களை தரமுடியாது என குறிப்பிடுகிறார்.
ஆடைகளின்றி சோதனைக்கு உட்படுத்தப்பட்டதை குற்றப்புலனாய்வுத் துறையினர் ஏற்றுக்கொண்டதாக சுரேஷ் சலேவின் மனைவி மனோரி சலே தெரிவித்தார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது கணவர் சுரேஷ் சலே தற்போது வரை உண்ணாவிரதத்தை கைவிடவில்லை எனவும், உண்ணவோ, நீர் அருந்தவோ அவர் தொடர்ந்து மறுத்து வருவதாகவும் சுரேஷ் சலேவின் மனைவி குறிப்பிட்டார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது கணவர் சுரேஷ் சலே தற்போது வரை உண்ணாவிரதத்தை கைவிடவில்லை எனவும், உண்ணவோ, நீர் அருந்தவோ அவர் தொடர்ந்து மறுத்து வருவதாகவும் சுரேஷ் சலேவின் மனைவி குறிப்பிட்டார்.
இந்நிலையில் சுரேஷ் சலேயின் மனைவியை பலர் தற்போது அரசியல் தேவைக்காக பயன்படுத்துகிறார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
.jpeg)