நாட்டில் டெங்கு படிப்படியாக ஒரு பெரும் பெருந்தொற்றாக தீவிரமடைந்து வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேற்கு மாகாணம் உட்பட டெங்கு பரவலாக உள்ள ஐந்து மாகாணங்களில் உள்ள வைத்தியசாலைகளில் நோயாளிகளை அனுமதிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், கொழும்பு தேசிய வைத்தியசாலை, அங்கொட தேசிய தொற்றா நோய்கள் நிறுவனம் (IDH), நீர்கொழும்பு, ஹோமகம, ராகம, களுபோவில மற்றும் பானதுறை வைத்தியசாலை ஆகியன அவற்றின் கொள்ளளவை தாண்டிவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சிகிச்சை பெற வரும் டெங்கு நோயாளிகள் வைத்திய ஆலோசனையின் பேரில் வீட்டிலேயே வைத்து தேவையான சிகிச்சை அளிக்கப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், வைத்தியசாலைக்கு வரும் அனைவருக்கும் தகுதிவாய்ந்த வைத்தியரிடம் பரிந்துரைக்கப்பட்டு, தேவையான வைத்திய பரிந்துரைகள் வழங்கப்படும் என்பதால், பொதுமக்கள் வைத்தியசாலைகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டாம் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நேற்று (22) காலை நிலவரப்படி, கடந்த இருபத்து நான்கு மணி நேரத்தில் ஒரே நாளில் பதிவான நோயாளிகளின் அதிகபட்ச எண்ணிக்கையான 1069 பேர் நாட்டில் கண்டறியப்பட்டுள்ளனர்.
