022இல் தொடங்கிய உக்ரைன் - ரஷ்யா போர் 4 ஆண்டுகளை கடந்து நீடித்து வருகிறது.
பலமுறை பேச்சுவார்த்தை முயற்சிகள் மேற்கொள்ளப்படும் தீர்வு எட்டப்படவில்லை.
உக்ரைன், ஐரோப்பாவின் நேட்டோ கூட்டமைப்பில் இணைவது தங்கள் பாதுகாப்புக்கு அச்சறுத்தல் என கூறி ரஷ்யா இந்த போரை தொடங்கியது.
உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகளும், ரஷ்யாவுக்கு வட கொரியா,சீனா ஆகிய நாடுகளும் ஆதரவளித்து வருகின்றன.
அவ்வப்போது ரஷ்யா - உக்ரைன் உட்கட்டமைப்புகளை குறிவைத்து பரஸ்பர டிரோன் தாக்குதல் நடத்தி வருகின்றன.
குறிப்பாக உக்ரைனின் நீண்ட தூரம் பயணிக்கும் டிரோன்கள், ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை குறிவைத்து வருகின்றன.
சைபீரியாவின் இர்குட்ஸ்க் பிராந்தியம் உள்ளிட்ட பல பகுதிகளில், ஒரு வாகனத்திற்கு தினசரி 50 லிட்டர் எரிபொருள் மட்டுமே வழங்கும் வகையில் ஒதுக்கீட்டு முறை அமுல்படுத்தப்பட்டுள்ளது.
கிரிமியாவிலும் பொதுமக்களுக்கான பெற்றோல் விற்பனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
தீவிர போர் நடந்து வரும் சூழலில் இராணுவ வாகனங்களுக்கு எரிப்பொருள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதை ரஷ்ய ஜனாதிபதி புடின் முதன்முறையாக அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளார்.
தேசிய தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், தற்காலிக எரிபொருள் தட்டுப்பாட்டைப் போக்க ரஷ்யா அதிகளவில் எரிபொருளை இறக்குமதி செய்யும் என்றும், வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளின் உற்பத்தியை உடனடியாகப் பலமடங்கு அதிகரிப்போம் என்றும் புடின் தெரிவித்துள்ளார்.
.jpeg)