ஆசிரியர் நியமனம் குறித்து பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு

Sinthu

 



இந்த ஆண்டு இறுதிக்குள் 23,000 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக என பிரதமரும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் வரும் 2027 ஆம் ஆண்டாகும்போது பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை கணிசமான அளவு குறைக்க முடியும் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

கல்வி அமைச்சின் வளாகத்தில் மேல் மாகாண தேசிய பாடசாலை அதிபர்களைத் தெளிவுபடுத்துதல் மற்றும் திறன் விருத்தி நிகழ்ச்சித்திட்ட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இந்த விபரங்களை குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ஆசிரியர் நியமனங்கள் தொடர்பான நீதிமன்றத் தீர்ப்புக்கு அமைய, 23,000 புதிய ஆசிரியர்களைப் பாடசாலைக் கட்டமைப்பிற்குள் இணைத்துக் கொள்வதற்கான அனுமதி கிடைத்துள்ளது.

பாடசாலைகளில் தற்போது ஆரம்பிக்கப்பட்டு இடைநடுவே நின்றுபோயுள்ள உள்கட்டமைப்பு மற்றும் சுகாதார வசதி மேம்பாட்டுத் திட்டங்களை மிக விரைவாக நிறைவு செய்து மாணவர்களின் பயன்பாட்டிற்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

2027 ஆம் ஆண்டு முதல் புதிய பாடசாலை அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பிப்பதற்கான திட்டவட்டமான வரைபுகளை அரசாங்கம் ஏற்கனவே தயாரித்து வருகின்றது.


Post a Comment

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.