உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ள போதிலும், உள்நாட்டில் எரிபொருள் விலையில் எவ்வித மாற்றத்தையும் எதிர்பார்க்க முடியாது என இலங்கை கனிமவள கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து கூட்டுத்தாபனத்தின் நிர்வாக இயக்குனர் மயூர நெத்திகுமாரக தெரிவிக்கையில், உலக சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது அமெரிக்க - ஈரான் போருக்கு முன்னர் காணப்பட்ட மட்டத்திற்கு இன்னும் குறைவடையவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்க மற்றும் ஈரான் ஜனாதிபதிகளுக்கு இடையில் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் எட்டப்பட்ட பூர்வாங்க அமைதி உடன்படிக்கையை அடுத்து, உலகளாவிய மசகு எண்ணெய் விலை தற்போது கணிசமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
நேற்று (22) நிலவரப்படி, பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 79.18 டொலராகவும், WTI வகை மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 75.29 டொலராகவும் பதிவாகியுள்ளது.
