வீட்டின் மீது மரம் விழுந்ததில் நான்கு பேர் காயம்!

Sinthu

 

நிலவும் மோசமான வானிலை காரணமாக நாவலப்பிட்டி பகுதியில் வீசிய கனமழை மற்றும் பலத்த காற்றின் காரணமாக இன்று (12) அதிகாலை சுமார் 1.00 மணியளவில், நாவலப்பிட்டி மேல் இம்புல்பிட்டிய பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது ஒரு பெரிய மரம் விழுந்ததில், வீட்டில் இருந்த நான்கு பேர் காயமடைந்ததாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். 

பெரிய மரம் விழுந்த பிறகு, மரத்தில் சிக்கிக்கொண்ட காயமடைந்தவர்களை அயலவர்கள் மீட்டு வைத்தியசாலையில் சிகிச்சையைக்காக சேர்த்துள்ளனர். 

தொடர்ந்து கனமழையுடன் கூடிய பலத்த காற்று காரணமாக முறிந்து விழுந்த மரத்தினால் வீட்டின் உடைமைகள் சேதம் ஆகிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 

எனினும் இதில் காயமடைந்தவர்கள் நாவலப்பிட்டி பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் என பொலிஸார் தெரிவித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.


Post a Comment

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.