சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் காரணமாக, தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று (02) குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது.
அதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,042.8 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
அதேவேளை, வெள்ளி ஒரு அவுண்ஸ் விலை 59.69 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த உயர்வு காரணமாக, இலங்கையிலும் தங்க விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக சந்தை தரப்புக்கள் தெரிவிக்கின்றன.
மேலும், அமெரிக்க டொலரின் வலுவூட்டல் மற்றும் சர்வதேச அரசியல் நிலைமைகளில் ஏற்பட்ட மாற்றங்களும் இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணங்களாகக் கருதப்படுகின்றன என வெளிநாட்டுத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
