இலங்கையை உலுக்கிய இளம் பெண் படுகொலை! பிரதான சூத்திரதாரியின் வாக்குமூலத்தில் வெளியான தகவல்

Sinthu

 


பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த அம்பாறை பெண் பிசியோதெரபிஸ்ட் ஒருவரின் மரணம் தொடர்பில் மேலும் பல திடுக்கிடும் உண்மைகள் தெரியவந்துள்ளன.   

குறித்த பெண்ணின் மரணம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில், உயிரிழந்த பெண் கழுத்து நெரிக்கப்பட்டதன் காரணமாகவே உயிரிழந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.   

இந்நிலையில் பெண் வைத்தியரின் கொலை தொடர்பில் தேடப்பட்டு வந்த காதலன் என அறியப்பட்ட பிரதான சந்தேகநபர் கடந்த ஒரு வார காலமாக தலைமறைவாகி இருந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் வைத்து மனைவி மற்றும் பிள்ளைகளுடன் நேற்றிரவு (24) பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.  

இதனையடுத்து பொலிஸார் நடத்திய விசாரணையில் பல தகவல்களை வெளியிட்டுள்ளார். அவர் தனது வாக்குமூலத்தில்,

பிரதான சந்தேகநபர் 30 வயதுக்கு மேற்பட்ட, திருமணமாகாத பெண்களை இலக்கு வைத்து, திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றும் பெரும் மோசடியில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இதேவேளை, உயிரிழந்த பிசியோதெரபிஸ்டை அம்பாறை வைத்தியசாலையில் சிகிச்சை பெறச் சென்றபோதுதான் அவர் சந்தித்துள்ளார். சந்தேகநபர் பெண்களை ஏமாற்றிப் பெற்ற பணத்தில் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார்.

இவர் பல்வேறு தந்திரோபாயங்கள் மூலம் பெண்களை ஏமாற்றிப் பெற்ற மொத்தப் பணம் இரண்டு கோடி ரூபாவிற்கும் அதிகம் என்பது தெரியவந்துள்ளது.

இந்த பணத்தில் கட்டுகஸ்தோட்டை பகுதியில் ஆடை விற்பனை நிலையம் ஒன்றையும் ஆரம்பித்துள்ளதுடன், அங்கு பணியாற்றிய இளம் பெண்ணிடமும் 10 இலட்சம் ரூபாவை அபகரிக்கத் திட்டமிட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வாறு ஏமாற்றப்படும் பெண்களுக்கு, தான் அந்த நபரின் "மூத்த சகோதரி" என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, இந்த மோசடிகளுக்கு உதவி செய்ததாக மனைவி தெரிவித்துள்ளார்.   

சந்தேகநபர் அடிக்கடி பயன்படுத்தும் போலி தலைமுடியும் அவரிடமிருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.   

இந்நிலையில், அம்பாறை வைத்தியசாலையில் பிசியோதெரபிஸ்டாக பணிபுரிந்த 34 வயதுடைய ஷாம்யா தர்ஷனி என்பவரை 3ஆம் திகதி நுவரெலியாவிற்கு அழைத்து வந்து அங்குள்ள அறையில் விட்டதாகவும், தொலைபேசிக்கு பலமுறை அழைத்தும் எந்த பதிலும் வராததால் 16ஆம் திகதி மீண்டும் அங்கு சென்றதாகவும் கூறியுள்ளார்.

இளம் பெண்ணின் உடலை சாரதி இருக்கைக்கு அருகில் வைத்து விட்டு தனது மனைவியும் மூன்று குழந்தைகளும் பின் இருக்கையில் இருந்ததாக சந்தேகநபர் கூறியுள்ளார்.

இதன்பின்னர் தனது மனைவியையும் குழந்தைகளையும் நண்பரின் வீட்டில் விட்டுவிட்டு, அந்த பெண்ணின் உடலை தெல்தெனியாவிற்கு எடுத்துச் சென்று வைத்தியசாலை வாகன நிறுத்துமிடத்தில் விட்டுச்சென்றதாக ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்நிலையில், பிரதான சந்தேகநபரும், அவரது மனைவியும் மேலதிக விசாரணைக்காக தற்போது நுவரெலியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, இவர்களுக்கு உதவிய நண்பரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Post a Comment

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.