பாடசாலைக்கு மாணவிக்கு நேர்ந்த கதி - அதிபர் உட்பட மூவர் கைது

Sinthu


 

அம்பலாந்தோட்டை தேசிய பாடசாலை ஒன்றில் 15 வயதுடைய மாணவி, அதே பாடசாலையில் வைத்து வேறொரு பாடசாலை மாணவனால் தகாத செயற்பாட்டுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தை மறைத்த குற்றச்சாட்டின் கீழ், அந்த பாடசாலையின் அதிபர், பிரதி அதிபர் மற்றும் சந்தேக நபரான மாணவன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்பலாந்தோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதம் 21ஆம் திகதி பாடசாலையில் நடைபெற்ற விளையாட்டு விழாவின் போது, இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த பாடசாலை மாணவியை, விளையாட்டு விழாவிற்காக வேறொரு பாடசாலையில் இருந்து வந்திருந்த 15 வயதுடைய மாணவன் பாடசாலை கட்டிடங்களுக்கு இடையே மறைவான ஒரு இடத்தில் வைத்து, அந்த மாணவியை தகாத செயற்பாட்டுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இது குறித்து சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு அம்பலாந்தோட்டை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, இந்த மூன்று சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்பலாந்தோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் தலைமைப் பொலிஸ் பரிசோதகருமான அமில ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர்கள் ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

Post a Comment

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.