இலங்கையை உலுக்கிய பெண்ணின் படுகொலை - கொலையாளி தொடர்பில் சகோதரின் பல அதிர்ச்சித் தகவல்கள்

Sinthu

 


கண்டி, தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் காரொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்திருந்த பெண் வைத்தியரின் மரணம் தொடர்பாக பொலிஸாரால் தேடப்பட்டு வரும் நபர் தப்பி சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த பெண்ணின் காதலன் என கூறப்படும் நபர், தனது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளுடன் கண்டி பகுதியில் உள்ள தனது வீட்டை விட்டு தப்பியோடியுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்த சந்தேக நபர் மறைந்திருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சுமார் 10 இடங்களில் பொலிஸார் சோதனை மேற்கொண்டனர்.

சந்தேக நபரின் தாயாரும் சகோதரரும் வசிக்கும் நாரம்மல பகுதியில் உள்ள வீட்டிற்குச் பொலிஸார் சென்றுள்ளனர். அங்கு அவர்களிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

இதன்போது, சந்தேக நபரின் மூத்த சகோதரர் பொலிஸாரிடம் தகவல் வெளியிடும் போது, சந்தேக நபர் சிறுவயது முதலே பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு பலரை ஏமாற்றி பணம் மற்றும் பல்வேறு பொருட்களைப் பெற்ற ஒரு ஏமாற்றுக்காரன் என குறிப்பிட்டுள்ளார்.

எனது தம்பி என்ற போதிலும் அவரின் முகத்தைக் கூட பார்க்க நான் விரும்பவில்லை. அவன் அந்தளவிற்கு மோசமான செயல்களைச் செய்யும் வெறுக்கத்தக்க ஒரு மனிதன்.

நாடு முழுவதும் உள்ள பல பெண்களை ஏமாற்றி பணம் பறித்துள்ளதாக சந்தேக நபரின் மூத்த சகோதரர் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சந்தேக நபர் தனது தோற்றத்தை மாற்றிக்கொண்டு தலைமறைவாக உள்ளார் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.

அவர் குறித்து ஏதேனும் தகவல் கிடைத்தால் உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்குமாறும் புலனாய்வு அதிகாரிகள் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Post a Comment

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.